Praise and Blame | Sarga-043 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: நகர மக்களின் கருத்துகளைக் கேட்ட பத்ரனிடம் ராமன்; மக்கள் ஆட்சியைப் புகழ்ந்தாலும், சீதையைப் பழித்துப் பேசுவதையும் தெரிவித்த பத்ரன்; துக்கமடைந்த ராமன்...
நாற்புறமும் அறிஞர்களும், ஹாசியக்காரர்களும் {நகைச்சுவைக் கலைஞர்களும்} பலவிதமான கதைகளுடன் அங்கே வீற்றிருக்கும் ராஜனை {ராமனை} உபாசித்து {வழிபட்டுக்} கொண்டிருந்தனர்.(1) விஜயன், மேலும் மதுமத்தன், காசியபன், மங்கலன், குடன், சுராஜன், காலியன், பத்ரன், தந்தவக்ரன், சுமாகதன்,(2) {ஆகிய} இவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தவர்களாக மஹாத்மாவான ராகவனின் முன்னிலையில் பரிஹாசம் கலந்த பலவிதமான கதைகளைக்[1] கூறிக் கொண்டிருந்தனர்.(3)






