Thursday, 16 July 2026

ஹனுமான் | சர்க்கம் – 035 (65)

Hanuman | Sarga-035 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஹனுமான் உற்பத்தி; சூரியனை நோக்கி எழுந்தது; ராஹு இந்திரனிடம் முறையிட்டது; இந்திரன் வஜ்ராயுதத்தால் ஹனுமானைத் தட்டியது; வாயுவின் கோபம்; பிரம்மனின் தலையீடு...

இராகு சூரியன் ஹனுமான் இந்திரன்

அப்போது ராமன், தக்ஷிண {தென்} திசையில் ஆசிரமத்தில் இருந்த {அகஸ்திய} முனிவரிடம் வினவினான்; {மேலும்} கைகளைக் கூப்பியவனாக, அடக்கத்துடன் கூடியவனாக இந்த அர்த்தமுள்ள சொற்களைக் கூறினான்:(1) "வாலியுடையதும், ராவணனுடையதுமான இந்த பலம் நிகரற்றதே. ஆனால், இவர்கள் இருவருடையதும் {இருவருடைய பலமும்} ஹனுமதனுனுக்கு {ஹனுமானின் பலத்துடன் ஒப்பிடுகையில்} சமமானதல்ல என்பது என் மதி {எண்ணம்}.(2) சௌரியம் {வீரம்}, காரியத்திறன் {சாமர்த்தியம்}, பலம் {வலிமை}, தைரியம் {மனவுறுதி}, பிரஜ்ஞை {பேரறிவு / புத்திக் கூர்மை}, நயசாதனம் {நீதிநெறிகளைச் செயல்படுத்தும் ஆற்றல் ஆகியவையும்}, விக்ரமமும், பிரபாவமும் ஹனூமதனிடம் கிருதாலயத்தை {செயல்புரி இடத்தைக்} கொண்டுள்ளன.(3) 

உத்தர ராமாயணம் 035ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ பஞ்சத்ரிம்ஷ²꞉ ஸர்க³꞉

இராகு ஹனுமான் இந்திரன்

அப்ருச்ச²த ததா³ ராமோ த³க்ஷிணாஷா²ஷ்²ரமம் முனிம் .
ப்ராஞ்ஜலிர்வினயோபேத இத³மாஹ வசோ (அ)ர்த²வத் .. 7.35.1 ..

அதுலம் ப³லமேதத்³வை வாலினோ ராவணஸ்ய ச .
ந த்வேதாப்⁴யாம் ஹனுமதா ஸமம் த்விதி மதிர்மம .. 7.35.2 ..

ஷௌ²ர்யம் தா³க்ஷ்யம் ப³லம் தை⁴ர்யம் ப்ராஜ்ஞதா நயஸாத⁴னம் .
விக்ரமஷ்²ச ப்ரபா⁴வஷ்²ச ஹனூமதி க்ருதாலயா꞉ .. 7.35.3 ..

Friday, 10 July 2026

வாலி | சர்க்கம் – 034 (46)

Vali | Sarga-034 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வாலியைப் போருக்கு அழைத்த ராவணன்; தென் கடலுக்குச் சென்றிருந்த வாலி, ராவணனைக் கக்கத்தில் இட்டுக் கொண்டு சென்றது; வாலியுடன் நட்பேற்படுத்திக் கொண்ட ராவணன்...

வாலி ராவணனுடன் கிஷ்கிந்தையின் அருகில் இறங்கியது

{கார்த்தவீரிய} அர்ஜுனனால் விடுவிக்கப்பட்ட பிறகு, ராக்ஷசாதிபன் ராவணன், அவ்வாறு செய்யப்பட்ட போதிலும் மனந்தளராமல் சர்வ பிருத்வியிலும் சுற்றித் திரிந்தான்.(1) இந்த ராவணன், ராக்ஷசனோ, மனுஷ்யனோ, அதிக பலம் பொருந்தியவன் எனக் கேள்விப்பட்டால், செருக்குடன் அவனைச் சந்தித்து யுத்தத்திற்கு அழைப்பவனாக இருந்தான்.(2)

உத்தர ராமாயணம் 034ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ சதுஸ்த்ரிம்ஷ²꞉ ஸர்க³꞉

வாலி ராவணனுடன் கிஷ்கிந்தையின் அருகில் இறங்கியது

அர்ஜுனேன விமுக்தஸ்து ராவணோ ராக்ஷஸாதி⁴ப꞉ .
சசார ப்ருதி²வீம் ஸர்வாமநிர்விண்ணஸ்ததா² க்ருத꞉ .. 7.34.1 ..

ராக்ஷஸம் வா மனுஷ்யம் வா ஷ்²ருணுதே (அ)யம் ப³லாதி⁴கம் .
ராவணஸ்தம் ஸமாஸாத்³ய யுத்³தே⁴ ஹ்வயதி த³ர்பித꞉ .. 7.34.2 ..

Tuesday, 7 July 2026

விடுதலையும் செருக்கும் | சர்க்கம் – 033 (23)

Freedom and Arrogance | Sarga-033 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனை விடுவிக்குமாறு கார்த்தவீரியனை வேண்டிய புலஸ்தியர்; மறுபேச்சின்றி ராவணனை விடுவித்த கார்த்தவீரியன்...

புலஸ்தியரின் முன்னிலையில் ராவணனை விடுவிக்கும் கார்த்தவீரியார்ஜுனன்

வாயுவைப் பிடித்ததைப் போல, ராவணன் பிடிக்கப்பட்டது {ராவணன் பிடிக்கப்பட்ட அந்தச் செய்தி},[1] திவத்தில் தைவதங்களால் {தேவலோகத்தில் தேவர்களால்} பேசப்படுவதைப் புலஸ்தியர் கேட்டார்.(1) பிறகு, பௌலஸ்திய தாயாத்யம் {புலஸ்தியரான தம் மரபுரிமை வாரிசும், தம் பேரனுமான ராவணன்} மீது கொண்ட சினேஹத்தால் பெரிதும் தூண்டப்பட்டவராக {தூண்டப்பட்ட புலஸ்தியர்}, எங்கே ராவணன் {இருந்தானோ, அந்த} மாஹிஷ்மதி என்ற பெயர் கொண்ட புரீக்குச் சென்றார்[2].(2) 

உத்தர ராமாயணம் 033ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ த்ரயஸ்த்ரிம்ஷ²꞉ ஸர்க³꞉

புலஸ்தியரின் முன்னிலையில் ராவணனை விடுவிக்கும் கார்த்தவீரியார்ஜுனன்

ராவணக்³ரஹணம் தத்து வாயுக்³ரஹணஸன்னிப⁴ம் .
தத꞉ புலஸ்த்ய꞉ ஷு²ஷ்²ராவ கதி²தம் தி³வி தை³வதை꞉ .. 7.33.1 ..

தத꞉ புத்ரக்ருதஸ்னேஹாத்கம்ப்யமானோ மஹாத்⁴ருதி꞉ .
மாஹிஷ்மதீபதிம் த்³ரஷ்டுமாஜகா³ம மஹாந்ருஷி꞉ .. 7.33.2 ..

Monday, 6 July 2026

கார்த்தவீரியார்ஜுனன் | சர்க்கம் – 032 (73)

Karthavirya Arjuna | Sarga-073 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நர்மதையின் நீரோட்டத்தைத் தடுத்த கார்த்தவீரியன்; நீர் பின்னோக்கிப் பாய்ந்து ராவணனின் பூஜைப் பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டது; கார்த்தவீரியனுடன் போரிட்டுக் கட்டுண்ட ராவணன்...

இராவணனை மாஹிஷ்மதிக்குள் இழுத்துச் செல்லும் கார்த்தவீரியன்

மிகக் கொடூரனான ராக்ஷசேந்திரன் {ராவணன்}, நர்மதையின் மணற்திட்டில் எங்கே புஷ்ப உபஹாரம் {மலர்களைக் கொண்டு பூஜை} செய்தானோ, அதே தேசத்திற்கு {இடத்திற்கு} சற்றுத் தொலைவில்[1],(1) வெற்றியாளர்களுள் சிறந்தவனும், மாஹிஷ்மதியின் பதியும் {தலைவனும்}, பிரபுவுமான {கார்த்தவீரிய} அர்ஜுனன், நாரீகள் சஹிதனாக {பெண்களுடன்} நர்மதையின் நீரில் இறங்கி கிரீடித்துக் கொண்டிருந்தான் {விளையாடிக் கொண்டிருக்கிறான்}.(2) 

Labels

அகஸ்தியர் அனரண்யன் அனலை அரம்பை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேதுமதி கைகசி கௌ சங்கன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுந்தரி சுமாலி சுரபி சூரியபானு சூர்ப்பணகை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிவாதகவசர்கள் பத்மன் பரத்வாஜர் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் புஷ்கரன் மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹேதி