Thursday, 6 August 2026

இலக்ஷ்மணன்தானா? | சர்க்கம் – 052 (19)

Is this Lakshmana? | Sarga-052 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையை வனத்தில் விட்டு வந்த செய்தியை ராமனிடம் சொன்ன லக்ஷ்மணன், சோகமுற்றிருந்த ராமனைத் தேற்றியது...

சீதையை வனத்தில் விட்டு வந்து ராமனிடம் பணியும் லக்ஷம்ணன்

இரகுநந்தனனான லக்ஷ்மணன், அங்கே கேசினியில் {கேசினி ஆற்றங்கரையில்}[1] அந்த ரஜனியை {இரவைக்} கழித்து, பிரபாதத்தின்போது {விடியற்காலை நேரத்தில்} மீண்டும் எழுந்து புறப்பட்டுச் சென்றான்.(1) பிறகு, நடுப்பகல் வந்தபோது, ரத்தினங்களால் நிறைந்ததும், மகிழ்ச்சியும், செழிப்புமுடைய மக்களால் சூழப்பட்டதுமான அயோத்யைக்குள் {அந்த} மஹாரதன் {பெரும் தேர்வீரனான அந்த லக்ஷ்மணன்} பிரவேசித்தான்.(2) மஹாமதிமிக்க சௌமித்ரியோ, பரம தைனியத்தை {பெருந்துயரை} அடைந்தான். "இராமரின் பாதங்களை அடைந்து, நான் அடைந்த நிலையை என்னவென்று கூறுவேன்?" {என்று நினைத்தான்}.(3) 

உத்தர ராமாயணம் 052ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ த்³விபஞ்சாஷ²꞉ ஸர்க³꞉

சீதையை வனத்தில் விட்டு வந்து ராமனிடம் பணியும் லக்ஷம்ணன்

தத்ர தாம் ரஜனீமுஷ்ய கேஷி²ன்யாம் ரகு⁴நந்த³ன꞉ .
ப்ரபா⁴தே புனருத்தா²ய லக்ஷ்மண꞉ ப்ரயயௌ ததா³ .. 7.52.1 ..

ததோ (அ)ர்த⁴தி³வஸே ப்ராப்தே ப்ரவிவேஷ² மஹாரத²꞉ .
அயோத்⁴யாம் ரத்னஸம்பூர்ணாம் ஹ்ருஷ்டபுஷ்டஜனாவ்ருதாம் .. 7.52.2 ..

ஸௌமித்ரிஸ்து பரம் தை³ன்யம் ஜகா³ம ஸுமஹாமதி꞉ .
ராமபாதௌ³ ஸமாஸாத்³ய வக்ஷ்யாமி கிமஹம் க³த꞉ .. 7.52.3 ..

Wednesday, 5 August 2026

விஷ்ணுவே ராமன் | சர்க்கம் – 051 (32)

Rama is Vishnu | Sarga-051 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற விஷ்ணு; பிருகு முனிவர் விஷ்ணுவுக்கு அளித்த சாபம்; "விஷ்ணுவே ராமனாகப் பிறந்தான்" என துர்வாசர் சொல்வது...

தசரதன் வசிஷ்டர் துர்வாசர் சுமந்திரன்

அவ்வாறு மஹாத்மாவான லக்ஷ்மணனால் தூண்டப்பட்ட சூதன் {சுமந்திரன், துர்வாச} ரிஷியால் கூறப்பட்ட அந்த வாக்கியத்தை {பின்வருமாறு} உரைக்கத் தொடங்கினான்:(1) "முன்பு அத்ரி புத்திரரும் {அத்ரி முனிவரின் மகனும்}, பெயரால் துர்வாசருமான {துர்வாசர் என்றழைக்கப்படுபவருமான} மஹாமுனிவர்[1], புண்ணியமான வசிஷ்டரின் ஆசிரமத்தில் வார்ஷிக்யத்திற்காக {சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிப்பதற்காகத்} தங்கியிருந்தார்[2].(2) மஹாதேஜஸ்வியும், பெரும் புகழுடையவருமான உம் பிதா {தசரதர்}, மஹாத்மாவான புரோஹிதரை {வசிஷ்டரைக்} காண விரும்பி அந்த ஆசிரமத்திற்கு தாமே[3] சென்றார்.(3) அவர் {தசரதர்}, சூரியனுக்கு ஒப்பாக, தேஜஸ்ஸால் பிரகாசிப்பவரைப் போன்ற மஹாமுனிவர் {துர்வாசர்}, வசிஷ்டரின் இடது பக்கத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.(4) அவர் பாத்யத்தாலும் {பாதங்களைக் கழுவுவதற்கான நீராலும்}, பழ, மூலங்களாலும் {கனி, கிழங்குகளாலும் உபசரிக்கப்பட்டு}, முனிவர்களுடன் சேர்ந்து {அங்கே} வசித்தார்.(5) 

உத்தர ராமாயணம் 051ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ ஏகபஞ்சாஷ²꞉ ஸர்க³꞉

தசரதன் வசிஷ்டர் துர்வாசர்

ததா² ஸஞ்சோதி³த꞉ ஸூதோ லக்ஷ்மணேன மஹாத்மனா .
தத்³வாக்யம்ருஷிணா ப்ரோக்தம் வ்யாஹர்துமுபசக்ரமே .. 7.51.1 ..

புரா நாம்னா ஹி து³ர்வாஸா அத்ரே꞉ புத்ரோ மஹாமுனி꞉ .
வஸிஷ்ட²ஸ்யாஷ்²ரமே புண்யே வார்ஷிக்யம் ஸமுவாஸ ஹ .. 7.51.2 ..

தமாஷ்²ரமம் மஹாதேஜா꞉ பிதா தே ஸுமஹாயஷா²꞉ .
புரோஹிதம் மஹாத்மானம் தி³த்³ருக்ஷுரக³மஸ்த்வயம் .. 7.51.3 ..

ஸ த்³ருஷ்ட்வா ஸூர்யஸங்காஷ²ம் ஜ்வலந்தமிவ தேஜஸா .
உபவிஷ்டம் வஸிஷ்ட²ஸ்ய ஸவ்யபார்ஷ்²வே மஹாமுனிம் .. 7.51.4 ..

தௌ முனீ தாபஸஷ்²ரேஷ்டௌ² வினீதோ ஹ்யபி⁴வாத³யத் .
ஸ தாப்⁴யாம் பூஜிதோ ராஜா ஸ்வாக³தேனாஸனேன ச ..

பாத்³யேன ப²லமூலைஷ்²ச உவாஸ முனிபி⁴꞉ ஸஹ .. 7.51.5 ..

Sunday, 2 August 2026

விதி | சர்க்கம் – 050 (20)

Fate | Sarga-050 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தேரில் ஏறிய லக்ஷ்மணன் துன்புறுவதைக் கண்ட சுமந்திரன்; துர்வாசர் சொன்னது...

சீதை செல்வதைப் பார்த்து சுமந்திரனிடம் பேசு லக்ஷ்மணன்

தீனமான {தளர்ந்த} உள்ளமுடைய லக்ஷ்மணனோ, ஆசிரமத்தில் பிரவேசிக்கச் செய்யப்பட்ட மைதிலியான சீதையைக் கண்டு, கோர சந்தாபத்தை {கடும் வருத்தத்தை} அடைந்தான்.(1) மேலும், மஹாதேஜஸ்வியானவன் {பேராற்றல்வாய்ந்த லக்ஷ்மணன்}, ராமனின் சாரதியும், மந்திரசாரதியுமான {ஆலோசனைகளில் தேரோட்டியைப் போல வழிகாட்டக் கூடியவனுமான} சுமந்திரனிடம் {பின்வருமாறு} கூறினான், "சீதையின் சந்தாபத்தால் {வருத்தத்தால்} உண்டான துக்கத்தைப் பார்ப்பீராக.(2) சுத்த சமாசாரமுடைய பத்தினியான {தூய ஒழுக்கமுடைய மனைவியான} ஜனகாத்மஜையை {ஜனகரின் மகளான சீதையைக்} கைவிடுவதைவிட ராகவருக்கு அதிக துக்கம்  உண்மையில் வேறென்ன இருக்கும்?(3) சாரதே, வைதேஹியைப் பிரிந்திருக்கும் ராகவரின் நிலை தைவத்தாலானதாக {விதியாலானதாக} நான் தெளிவாக கருதுகிறேன். தைவம் {விதி} நித்யம் கடப்பதற்கரியது.(4) 

உத்தர ராமாயணம் 050ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ பஞ்சாஷ²꞉ ஸர்க³꞉

சீதை செல்வதைப் பார்த்து சுமந்திரனிடம் பேசு லக்ஷ்மணன்

த்³ருஷ்ட்வா து மைதி²லீம் ஸீதாமாஷ்²ரமே ஸம்ப்ரவேஷி²தாம் .
ஸந்தாபமக³மத்³கோ⁴ரம் லக்ஷ்மணோ தீ³னசேதன꞉ .. 7.50.1 ..

அப்³ரவீச்ச மஹாதேஜா꞉ ஸுமந்த்ரம் மந்த்ரஸாரதி²ம் .
ஸீதாஸந்தாபஜம் து³꞉க²ம் பஷ்²ய ராமஸ்ய ஸாரதே² .. 7.50.2 ..

ததோ து³꞉க²தரம் கிம் நு ராக⁴வஸ்ய ப⁴விஷ்யதி .
பத்னீம் ஷு²த்³த⁴ஸமாசாராம் விஸ்ருஜ்ய ஜனகாத்மஜாம் .. 7.50.3 ..

வ்யக்தம் தை³வாத³ஹம் மன்யே ராக⁴வஸ்ய வினா ப⁴வம் .
வைதே³ஹ்யா ஸாரதே² நித்யம் தை³வம் ஹி து³ரதிக்ரமம் .. 7.50.4 ..

Saturday, 1 August 2026

வால்மீகி | சர்க்கம் – 049 (24)

Valmiki | Sarga-049 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தனியே புலம்பித் தவித்த சீதையைக் கண்ட முனிகுமாரர்கள்; அவளைத் தமது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்ற வால்மீகி; அவளை ரிஷிபத்தினிகளிடம் ஒப்படைத்தது...

சீதையை முனிபத்னிகளிடம் ஒப்படைக்கும் வால்மீகி

அழுதுகொண்டிருந்த சீதையைக் கண்டு, முனிதாரகர்களானவர்கள் {முனிவர்களின் பிள்ளைகளானவர்கள்}, பெரும் ஞானம் கொண்ட பகவான் வால்மீகி எங்கே இருந்தாரோ, அங்கே விரைந்து சென்றனர்[1].(1) 

Labels

அகஸ்தியர் அங்கதன் அஞ்சனை அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் யுதாஜித் ராகு வசிஷ்டர் வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி