Tuesday, 28 July 2026

புகழும் பழியும் | சர்க்கம் – 043 (23)

Praise and Blame | Sarga-043 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நகர மக்களின் கருத்துகளைக் கேட்ட பத்ரனிடம் ராமன்; மக்கள் ஆட்சியைப் புகழ்ந்தாலும், சீதையைப் பழித்துப் பேசுவதையும் தெரிவித்த பத்ரன்; துக்கமடைந்த ராமன்...

தன் சபையில் பத்ரனுடன் பேசும் ராமன்

நாற்புறமும் அறிஞர்களும், ஹாசியக்காரர்களும் {நகைச்சுவைக் கலைஞர்களும்} பலவிதமான கதைகளுடன் அங்கே வீற்றிருக்கும் ராஜனை {ராமனை} உபாசித்து {வழிபட்டுக்} கொண்டிருந்தனர்.(1) விஜயன், மேலும் மதுமத்தன், காசியபன், மங்கலன், குடன், சுராஜன், காலியன், பத்ரன், தந்தவக்ரன், சுமாகதன்,(2) {ஆகிய} இவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தவர்களாக மஹாத்மாவான ராகவனின் முன்னிலையில் பரிஹாசம் கலந்த பலவிதமான கதைகளைக்[1] கூறிக் கொண்டிருந்தனர்.(3) 

உத்தர ராமாயணம் 043ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ த்ரிசத்வாரிம்ஷ²꞉ ஸர்க³꞉

தன் சபையில் பத்ரனுடன் பேசும் ராமன்

தத்ரோபவிஷ்டம் ராஜானமுபாஸந்தே விசக்ஷணா꞉ .
கதா²னாம் ப³ஹுரூபாணாம் ஹாஸ்யகாரா꞉ ஸமந்தத꞉ .. 7.43.1 ..

விஜயோ மது⁴மத்தஷ்²ச காஷ்²யபோ மங்க³ள꞉ குட꞉ .
ஸுராஜ꞉ காளியோ ப⁴த்³ரோ த³ந்தவக்ர꞉ ஸுமாக³த⁴꞉ .. 7.43.2 ..

ஏதே கதா² ப³ஹுவிதா⁴꞉ பரிஹாஸஸமன்விதா꞉ .
கத²யந்தி ஸ்ம ஸம்ஹ்ருஷ்டா ராக⁴வஸ்ய மஹாத்மன꞉ .. 7.43.3 ..

Monday, 27 July 2026

சீதையின் விருப்பம் | சர்க்கம் – 042 (36)

The desire of Sita | Sarga-042 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் சீதையுடன் நந்தவனத்தில் மகிழ்ந்திருத்தல்; மதுவும், மாமிசமும்; சீதை கருத்தரித்தல்; தபோவனங்களுக்குச் செல்லும் சீதையின் விருப்பம்...

சீதைக்கு மைரேயக மதுவைத் தரும் ராமன்

பிறகு, பெருந்தோள்களைக் கொண்ட அந்த ராமன், ஹேமத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்ட புஷ்பகத்தை அனுப்பிவிட்டு, அப்போது அசோகவனிகைக்குள்[1] பிரவேசித்தான்.(1) சந்தனங்களாலும், அகுருக்களாலும் {அகில் மரங்களாலும்}, மாமரங்களாலும், உயர்ந்த காலேயகங்களாலும் {மஞ்சள் சந்தன மரங்களாலும்}, தேவதாரு வனங்களாலும், சுற்றிலும் {அந்த அசோக வனிகை} மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.(2) 

உத்தர ராமாயணம் 042ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ த்³விசத்வாரிம்ஷ²꞉ ஸர்க³꞉

சீதைக்கு மைரேயக மதுவைத் தரும் ராமன்

ஸ விஸ்ருஜ்ய ததோ ராம꞉ புஷ்பகம் ஹேமபூ⁴ஷிதம் .
ப்ரவிவேஷ² மஹாபா³ஹுரஷோ²கவநிகாம் ததா³ .. 7.42.1 ..

சந்த³நாகு³ருசூதைஷ்²ச துங்க³காலேயகைரபி .
தே³வதா³ருவனைஷ்²சாபி ஸமந்தாது³பஷோ²பி⁴தாம் .. 7.42.2 ..

Saturday, 25 July 2026

புஷ்பக விமானம் | சர்க்கம் – 041 (22)

Pushpaka Vimana | Sarga-041 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: குபேரனிடம் சென்ற புஷ்பக விமானம்; இராமனுக்கே வாகனமாகும்படி குபேரன் சொன்னதால் திரும்பி வந்தது; நினைக்கும் போது வந்தால் போதும் என விடைகொடுத்து அனுப்பிய ராமன்...

புஷ்பக விமானமும் ராமனும்

பெரும் தோள்களைக் கொண்ட ராமன், ரிக்ஷர்களுக்கும், வானரர்களுக்கும், ராக்ஷசர்களுக்கும் விடைகொடுத்து அனுப்பிவிட்டு, தன் உடன் பிறந்தவர்களுடன் இணைந்து சுகமாகவும், சுகத்தை அனுபவிப்பவனாகவும் மகிழ்ச்சியடைந்தான்.(1) பிறகு, பிற்பகல் சமயத்தில் உடன்பிறந்தாருடன் கூடிய ராகவன், அந்தரிக்ஷத்தில் {ஆகாயத்தில்} இருந்து பேசப்பட்ட மதுர வாணியை {இனிமையான குரலைப் பின்வருமாறு} கேட்டான்.(2) "சௌமியா {மென்மையானவனே}, ராமா, சௌம்யமான வதனத்தால் {முகத்தால்} என்னைப் பார்ப்பாயாக. பிரபோ, குபேரனின் பவனத்திலிருந்து {அரண்மனையிலிருந்து} வந்திருக்கும் என்னை புஷ்பகமாக {புஷ்பக விமானமாக} அறிந்துகொள்வாயாக.(3)

உத்தர ராமாயணம் 041ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ ஏகசத்வாரிம்ஷ²꞉ ஸர்க³꞉

புஷ்பக விமானமும் ராமனும்

விஸ்ருஜ்ய ச மஹாபா³ஹுர்ருக்ஷவானரராக்ஷஸான் .
ப்⁴ராத்ருபி⁴꞉ ஸஹிதோ ராம꞉ ப்ரமுமோத³ ஸுக²ம் ஸுகீ² .. 7.41.1 ..

அதா²பராஹ்ணஸமயே ப்⁴ராத்ருபி⁴꞉ ஸஹ ராக⁴வ꞉ .
ஷு²ஷ்²ராவ மது⁴ராம் வாணீமந்தரிக்ஷாத் ப்ரபா⁴ஷிதாம் .. 7.41.2 ..

ஸௌம்ய ராம நிரீக்ஷஸ்வ ஸௌம்யேன வத³னேன மாம் .
குபே³ரப⁴வனாத்ப்ராப்தம் வித்³தி⁴ மாம் புஷ்பகம் ப்ரபோ⁴ .. 7.41.3 ..

Wednesday, 22 July 2026

பிரியாவிடை | சர்க்கம் – 040 (29)

Farewell | Sarga-040 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்களும், ரிக்ஷர்களும், ராக்ஷசர்களும் தத்தமது வசிப்பிடங்களுக்குச் செல்ல விடைகொடுத்து அனுப்பிய ராமன்...

இராமனிடம் விடைபெற்றுத் திரும்பும் ஹனுமான்

அவ்வாறு[1] ரிக்ஷங்கள் {கரடிகள்}, வானரர்கள் {குரங்குகள்}, ராக்ஷசர்கள் ஆகிய அவர்கள் {அயோத்தியில்} வசித்துக் கொண்டிருக்கையில், மஹாதேஜஸ்வியான ராகவனோ {ராமனோ}, சுக்ரீவனிடம் இதைக் கூறினான்:(1) "சௌம்யா {அன்பானவனே}, ஸுராஸுரர்களால் {தேவ, அசுரர்களால்} வெல்லப்படமுடியாத கிஷ்கிந்தைக்குச் செல்வாயாக. {உன்} அமைச்சர்களுடன் சேர்ந்து, முட்கள் {பகைவர்கள்} ஒழிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை ஆள்வாயாக.(2) மஹாபாஹோ, நீ பரம பிரீதியுடன் கூடியவனாக, அங்கதனையும்,[2] ஹனுமானையும், மஹாபலவானான நளனையும் பார்ப்பாயாக {கவனித்துக் கொள்வாயாக}.(3) வீரனும், {தாரையின் தந்தையும், உன்} மாமனாருமான சுஷேணனையும், பலவான்களில் சிறந்தவனான தாரனையும், அப்படியே வெல்வதற்கரியவனான குமுதனையும், அப்படியே மஹாபலவானான நீலனையும்,(4) வீரனான சதவலியையும், அப்படியே மைந்தனையும், அப்படியே துவிவிதனையும், கஜனையும், கவாக்ஷனையும், கவயனையும், மஹாபலவானான சரபனையும், அப்படியே கந்தமாதனனையும் நீ பிரீதியுடன் கூடியவனாகப் பார்ப்பாயாக {கவனித்துக் கொள்வாயாக}.(5) மேலும் பெரும் விக்ராந்தனான ரிஷபனையும், மஹாபலவானான ஜாம்பவந்தனையும், மேலும் எனக்காக {தங்கள்} ஜீவிதத்தைக் கைவிட்ட {கைவிடத் துணிந்த} இந்தப் பெரும் மஹாத்மாக்களையும்,(6) நீ பிரீதியுடன் கூடியவனாகப் பார்ப்பாயாக {கவனித்துக் கொள்வாயாக}. மேலும் இவர்களுக்குப் பிரியமில்லாததைச் செய்யாதிருப்பாயாக" {என்றான் ராமன்}.(7)

Labels

அகஸ்தியர் அங்கதன் அஞ்சனை அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்ரீவன் சுந்தரி சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தாரன் தாரை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் யுதாஜித் ராகு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி