Hanuman | Sarga-035 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஹனுமான் உற்பத்தி; சூரியனை நோக்கி எழுந்தது; ராஹு இந்திரனிடம் முறையிட்டது; இந்திரன் வஜ்ராயுதத்தால் ஹனுமானைத் தட்டியது; வாயுவின் கோபம்; பிரம்மனின் தலையீடு...
அப்போது ராமன், தக்ஷிண {தென்} திசையில் ஆசிரமத்தில் இருந்த {அகஸ்திய} முனிவரிடம் வினவினான்; {மேலும்} கைகளைக் கூப்பியவனாக, அடக்கத்துடன் கூடியவனாக இந்த அர்த்தமுள்ள சொற்களைக் கூறினான்:(1) "வாலியுடையதும், ராவணனுடையதுமான இந்த பலம் நிகரற்றதே. ஆனால், இவர்கள் இருவருடையதும் {இருவருடைய பலமும்} ஹனுமதனுனுக்கு {ஹனுமானின் பலத்துடன் ஒப்பிடுகையில்} சமமானதல்ல என்பது என் மதி {எண்ணம்}.(2) சௌரியம் {வீரம்}, காரியத்திறன் {சாமர்த்தியம்}, பலம் {வலிமை}, தைரியம் {மனவுறுதி}, பிரஜ்ஞை {பேரறிவு / புத்திக் கூர்மை}, நயசாதனம் {நீதிநெறிகளைச் செயல்படுத்தும் ஆற்றல் ஆகியவையும்}, விக்ரமமும், பிரபாவமும் ஹனூமதனிடம் கிருதாலயத்தை {செயல்புரி இடத்தைக்} கொண்டுள்ளன.(3)






