Is this Lakshmana? | Sarga-052 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையை வனத்தில் விட்டு வந்த செய்தியை ராமனிடம் சொன்ன லக்ஷ்மணன், சோகமுற்றிருந்த ராமனைத் தேற்றியது...
இரகுநந்தனனான லக்ஷ்மணன், அங்கே கேசினியில் {கேசினி ஆற்றங்கரையில்}[1] அந்த ரஜனியை {இரவைக்} கழித்து, பிரபாதத்தின்போது {விடியற்காலை நேரத்தில்} மீண்டும் எழுந்து புறப்பட்டுச் சென்றான்.(1) பிறகு, நடுப்பகல் வந்தபோது, ரத்தினங்களால் நிறைந்ததும், மகிழ்ச்சியும், செழிப்புமுடைய மக்களால் சூழப்பட்டதுமான அயோத்யைக்குள் {அந்த} மஹாரதன் {பெரும் தேர்வீரனான அந்த லக்ஷ்மணன்} பிரவேசித்தான்.(2) மஹாமதிமிக்க சௌமித்ரியோ, பரம தைனியத்தை {பெருந்துயரை} அடைந்தான். "இராமரின் பாதங்களை அடைந்து, நான் அடைந்த நிலையை என்னவென்று கூறுவேன்?" {என்று நினைத்தான்}.(3)






