Tuesday, 9 June 2026

சாபமும், சூர்ப்பணகையும் | சர்க்கம் – 024 (42)

The curse and Shurpanakha | Sarga-024 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனால் கடத்தப்பட்ட பெண்களின் அழுகையும், புலம்பலும்; அவர்கள் அவனுக்கு அளித்த சாபம்; சூர்ப்பணகை, கரன் ஆகியோரை தண்டகாரண்யத்தில் வசிக்கச் செய்தது...

Ravana and Shurpanakha

துராத்மாவான ராவணன் மகிழ்ச்சியுடன் திரும்பி வரும் வழியில்[1], நரேந்திரர்கள், ரிஷிகள் {மன்னர்கள், முனிவர்கள்}, தேவர்கள், கந்தர்வர்களின் கன்னிகைகளைக் கவர்ந்து சென்றான்.(1) பார்வைக்கு அழகான கன்னிகைகளையும், ஸ்திரீகளையும் கண்டதும், அந்த ராக்ஷசன் {ராவணன்}, அவர்களுடைய பந்துஜனங்களை {உற்றார் உறவினரைக்} கொன்றுவிட்டு, {புஷ்பக} விமானத்திலேயே அவர்களைச் சிறை பிடித்தான்.(2) இவ்வாறு பன்னக {நாக} கன்னிகைகளையும், ராக்ஷச, அசுர, மானுஷ, யக்ஷ, தானவ கன்னிகைகளையும் விமானத்தில் அவன் வலுக்கட்டாயமாக ஏற்றினான்.(3) துக்கத்தினால் ஒரே நேரத்தில் அவர்கள் யாவரும், சோகம், பயம் என்ற அக்னியில் {நெருப்பில்} உண்டான நெருப்பு ஜுவாலைகளுக்குத் துல்லியமாக {தீப்பொறி போல்} கண்ணீர் பெருக்கினர்.(4)  நதிகளால் {நிறையும்} சாகரத்தைப் போலக் களங்கமற்றவர்களான அவர்களின் பயம், சோகம் ஆகியவற்றில் உண்டான மங்கலமற்ற கண்ணீரால் அந்த விமானம் நிறைந்தது.(5) நாக, கந்தர்வ கன்னிகைகளும், மஹரிஷிகளின் தனயைகளும் {மகள்களும்}, நூற்றுக்கணக்கான தைத்திய, தானவ கன்னிகைகளும் அந்த விமானத்தில் அழுது கொண்டிருந்தனர்.(6) 

உத்தர ராமாயணம் 024ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ சதுர்விம்ஷ²꞉ ஸர்க³꞉

Ravana and Shurpanakha

நிவர்தமான꞉ ஸம்ஹ்ருஷ்டோ ராவணஸ்ஸுது³ராத்மவான் .
ஜஹ்ரே பதி² நரேந்த்³ரர்ஷிதே³வக³ந்த⁴ர்வகன்யகா꞉ .. 7.24.1 ..

த³ர்ஷ²னீயாம் ஹி ரக்ஷ꞉ ஸ கன்யாம் ஸ்த்ரீம் வாபி பஷ்²யதி .
ஹத்வா ப³ந்து⁴ஜனம் தஸ்யா விமானே தாம் ருரோத⁴ ஹ .. 7.24.2 ..

ஏவம் பன்னக³கன்யாஷ்²ச ராக்ஷஸாஸுரமானுஷீ꞉ .
யக்ஷதா³னவகன்யாஷ்²ச விமானே ஸோ (அ)த்⁴யரோபயத் .. 7.24.3 ..

தாஷ்²ச ஸர்வா꞉ ஸமம் து³꞉கா²ன்முமுசுர்பா³ஷ்பஜம் ஜலம் .
துல்யமக்³ன்யர்சிஷாம் தத்ர ஷோ²காக்³னிப⁴யஸம்ப⁴வம் .. 7.24.4 ..

தாபி⁴꞉ ஸர்வானவத்³யாபி⁴ர்நதீ³பி⁴ரிவ ஸாக³ர꞉ .
ஆபூரிதம் விமானம் தத்³ப⁴யஷோ²காஷி²வாஷ்²ருபி⁴꞉ .. 7.24.5 ..

நாக³க³ந்த⁴ர்வகன்யாஷ்²ச மஹர்ஷிதனயாஷ்²ச யா꞉ .
தை³த்யதா³னவகன்யாஷ்²ச விமானே ஷ²தஷோ² (அ)ருத³ன் .. 7.24.6 ..

Friday, 5 June 2026

வருணன் | சர்க்கம் – 023 (54)

Varuna | Sarga-023 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுக்கு நிவாதகவசர்களுடன் ஏற்பட்ட நட்பு; காலகேயர்களை வென்று, வித்யுத்ஜிஹ்வனை கொன்றது; இராவணன், தெய்வீகப் பசுவான சுரபியை வணங்கியது; வருணனின் புத்திரர்களை வென்றது...

Ravana bowing to the Divine cow Surabhi also known as Kamadhenu

இரணஸ்லாகியான தசக்ரீவன் {போரைப் புகழ்பவனும், பத்துக் கழுத்துகளைக் கொண்டவனுமான ராவணன்}, திரிதசபுங்கவனான {முப்பத்து முக்கோடி தேவர்களில் சிறந்தவனான} யமனை வெற்றி கொண்ட பிறகு, தன் சகாயர்களை {உதவியாளர்களை/அமைச்சர்களைப்} பார்த்தான்.(1) பிறகு, {யமனின்} தாக்குதலில் காயமடைந்து, உதிரம் தோய்ந்த உடலைக் கொண்ட ராவணனைக் கண்ட ராக்ஷசர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் அவனை அணுகினர்.(2) மாரீசன் முதலிய பிரமுகர்கள் ஜயத்தை {ராவணனின் வெற்றியைப்} போற்றி வாழ்த்திய பின்னர், ராவணனால் ஆறுதல் கூறப்பட்டவர்களாக புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} ஏறினர்.(3) 

உத்தர ராமாயணம் 023ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ த்ரயோவிம்ஷ²꞉ ஸர்க³꞉

Ravana bowing to the Divine cow Surabhi also known as Kamadhenu

ததோ ஜித்வா த³ஷ²க்³ரீவோ யமம் த்ரித³ஷ²புங்க³வம் .
ராவணஸ்து ரணஷ்²லாகீ⁴ ஸ்வஸஹாயாந்த³த³ர்ஷ² ஹ .. 7.23.1 .. 

ததோ ருதி⁴ரஸிக்தாங்க³ம் ப்ரஹாரைர்ஜர்ஜரீக்ருதம் .
ராவணம் ராக்ஷஸா த்³ருஷ்ட்வா ஹ்யஷ்டவத் ஸமுபாக³மன் .. 7.23.2 ..

ஜயேன வர்த⁴யித்வா ச மாரீசப்ரமுகா²ஸ்தத꞉ .
புஷ்பகம் பே⁴ஜிரே ஸர்வே ஸாந்த்விதா ராவணேன து .. 7.23.3 ..

Monday, 1 June 2026

இயமன் | சர்க்கம் – 022 (51)

Yama | Sarga-022 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இயமனுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த கடும்போர்; யமனை வேண்டிய பிரம்மன்; யமன் மறைந்தது...

Brahma stops Yama from using his Kaladhanda against Ravana

அந்த வைவஸ்வதப் பிரபு {சூரியனின் மகனும், தலைவனுமான யமன்}, அவனுடைய மஹாநாதத்தை {ராவணனின் பெரும் முழக்கத்தைக்} கேட்டுவிட்டு, தன் சத்ரு விஜயமடைந்தான் என்றும், தன் சொந்த பலம் {படை} அழிவடைகிறது என்றும் கருதினான்.(1) மேலும் அவன் {யமன்}, தன் படைவீரர்கள் கொல்லப்பட்டதை அறிந்து, குரோதத்தில் சிவந்த கண்களுடன், தன் சூதனிடம் {தேரோட்டியிடம்}, "இந்தத் தேரைத் துரிதமாகக் கொண்டு வருவாயாக" என்று கூறினான்.(2) 

உத்தர ராமாயணம் 022ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ த்³வாவிம்ஷ²꞉ ஸர்க³꞉

Brahma stops Yama from using his Kaladhanda against Ravana

ஸ தஸ்ய து மஹாநாத³ம் ஷ்²ருத்வா வைவஸ்வத꞉ ப்ரபு⁴꞉ .
ஷ²த்ரும் விஜயினம் மேனே ஸ்வப³லஸ்ய ச ஸங்க்ஷயம் .. 7.22.1 ..

ஸ ஹி யோதா⁴ன்ஹதான்மத்வா க்ரோத⁴ஸம்ரக்தலோசன꞉ .
அப்³ரவீத்த்வரிதம் ஸூதம் ரதோ² (அ)யமுபனீயதாம் .. 7.22.2 ..

Wednesday, 27 May 2026

பாசுபதாஸ்திரம் | சர்க்கம் – 021 (46)

Pasupata Astra | Sarga-021 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: யமனிடம் விரைந்து சென்று ராவணனின் வரவை அறிவித்த நாரதர்; நரகத்தின் பாபிகளை விடுவித்த ராவணன்; யமகிங்கரர்களுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த யுத்தம்...

Ravana Yama war in a Yamaloka

இவ்வாறு நன்கு சிந்தித்த அந்த விப்ரேந்திரர் {பிராமணர்களில் சிறந்தவரான அந்த நாரதர்}, நடந்ததை அப்படியே கூறுவதற்காக, லகு விக்ரமத்துடன் {வேகமான நடையுடன்} யமனின் சதனத்தை {இருப்பிடத்தை} நோக்கிச் சென்றார்.(1) அங்கே அவர் {நாரதர்}, அக்னியை முன்னிறுத்திக் கொண்டு, பிராணிகளில் {உயிரினங்களில்} எவருக்கு எத்தகைய விதானத்தை வழங்க வேண்டுமோ {எவருக்கு எத்தகையதைச் செய்ய வேண்டுமோ}, அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் யம தேவனை தம் முன்னே கண்டார்.(2) 

Labels

அகஸ்தியர் அனரண்யன் இந்திரன் இராமன் இராவணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கேதுமதி கைகசி கௌ சங்கன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுந்தரி சுமாலி சுரபி சூரியபானு சூர்ப்பணகை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவவர்ணினி நந்தி நாரதர் நிவாதகவசர்கள் பத்மன் பரத்வாஜர் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் புஷ்கரன் மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹேதி