Wednesday, 27 May 2026

பாசுபதாஸ்திரம் | சர்க்கம் – 021 (46)

Pasupata Astra | Sarga-021 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: யமனிடம் விரைந்து சென்று ராவணனின் வரவை அறிவித்த நாரதர்; நரகத்தின் பாபிகளை விடுவித்த ராவணன்; யமகிங்கரர்களுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த யுத்தம்...

Ravana Yama war in a Yamaloka

இவ்வாறு நன்கு சிந்தித்த அந்த விப்ரேந்திரர் {பிராமணர்களில் சிறந்தவரான அந்த நாரதர்}, நடந்ததை அப்படியே கூறுவதற்காக, லகு விக்ரமத்துடன் {வேகமான நடையுடன்} யமனின் சதனத்தை {இருப்பிடத்தை} நோக்கிச் சென்றார்.(1) அங்கே அவர் {நாரதர்}, அக்னியை முன்னிறுத்திக் கொண்டு, பிராணிகளில் {உயிரினங்களில்} எவருக்கு எத்தகைய விதானத்தை வழங்க வேண்டுமோ {எவருக்கு எத்தகையதைச் செய்ய வேண்டுமோ}, அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் யம தேவனை தம் முன்னே கண்டார்.(2) 

உத்தர ராமாயணம் 021ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ ஏகவிம்ஷ²꞉ ஸர்க³꞉

Ravana Yama war in a Yamaloka

ஏவம் ஸஞ்சிந்த்ய விப்ரேந்தோ³ ஜகா³ம லகு⁴விக்ரம꞉ .
ஆக்²யாதும் தத்³யதா²வ்ருத்தம் யமஸ்ய ஸத³னம் ப்ரதி .. 7.21.1 ..

அபஷ்²யத்ஸ யமம் தத்ர தே³வமக்³னிபுரஸ்க்ருதம் .
விதா⁴னமுபதிஷ்ட²ந்தம் ப்ராணினோ யஸ்ய யாத்³ருஷ²ம் .. 7.21.2 ..

Monday, 25 May 2026

நாரதர் | சர்க்கம் – 020 (33)

Naradha | Sarga-020 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நாரதரைக் கண்ட ராவணன்; அவரால் தூண்டப்பெற்றது; யமனை எதிர்த்து யமலோகம் சென்ற ராவணன்...

Conversation betwee Ravana and Naradha

இராக்ஷசாதிபன் பிருத்வியில் இருந்த மர்த்தியர்களை {பூமியில் இருந்த மனிதர்களை} அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது, மேகக் கூட்டத்திற்கிடையில் இருந்த முனிபுங்கவரான நாரதரை அணுகினான்.(1)  நிசாசரன் தசக்ரீவன், அவரை வணங்கி, குசலம் விசாரித்து, அவர் வந்ததற்கான காரணத்தையும் கேட்டான்.(2)

உத்தர ராமாயணம் 020ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ விம்ஷ²꞉ ஸர்க³꞉

Ravana and Naradha

ததோ வித்ராஸயன்மர்த்யான்ப்ருதி²வ்யாம் ராக்ஷஸாதி⁴ப꞉ .
ஆஸஸாத³ க⁴னே தஸ்மிந்நாரத³ம் முனிபுங்க³வம் .. 7.20.1 ..

தஸ்யாபி⁴வாத³னம் க்ருத்வா த³ஷ²க்³ரீவோ நிஷா²சர꞉ .
அப்³ரவீத்குஷ²லம் ப்ருஷ்ட்வா ஹேதுமாக³மனஸ்ய ச .. 7.20.2 ..

Tuesday, 19 May 2026

அனரண்யன் | சர்க்கம் – 019 (32)

Anaranya | Sarga-019 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அயோத்திக்குச் சென்ற ராவணன்; அனரண்யனைக் கொன்றது; இராவணன் அடைந்த சாபம்...

Ravana defeats Ayodhya king Anaranya

இராக்ஷசாதிபன் தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்}, மருத்தனை வென்று, அங்கிருந்து புறப்பட்ட பிறகு, நரேந்திரர்களின் நகரங்களுடன் யுத்தம் செய்ய விரும்பினான்.(1) மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் ஒப்பான வலிமையுள்ள ராஜேந்திரர்களை அணுகிய அந்த ராக்ஷசேந்திரன், "எனக்கு யுத்தத்தைக் கொடுப்பீராக.(2) அல்லது, "நாங்கள் வெல்லப்பட்டோம்" என்று கூறுவீராக. இதுவே என் நிச்சயமாகும் {தீர்மானமாகும்}. இதற்கு முரணாகச் செயல்படுபவர்களுக்கு மோக்ஷம் உண்டாகாது {விடுதலை கிடைக்காது}.(3) தர்ம நிச்சயம் கொண்டவர்களும், அச்சமற்றவர்களும், பிராஜ்ஞர்களுமான பார்த்திபர்களும் {அறிஞர்களுமான மன்னர்களும்}, மஹாபலவான்களான ராஜர்களும் அன்யோன்யம் {ஒருவருக்கொருவர்} ஆலோசனையில் ஈடுபட்டனர். அவர்கள், தங்கள் ரிபு {பகைவன்} அடைந்திருக்கும் வரத்தின் பலத்தை அறிந்து, தாங்கள் வெல்லப்பட்டதாகக் கூறினர்.(4) தாதா {ஐயா, ராமா}, துஷ்யந்தன், ஸுரதன், காதி, கயன், ராஜா புரூரவன் {புரூரவஸ்}[1] உள்ளிட்ட இந்த சர்வ பார்த்திபர்களும், "நாங்கள் வெல்லப்பட்டோம்" என்று கூறினர்.(5)

உத்தர ராமாயணம் 019ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ ஏகோனவிம்ஷ²꞉ ஸர்க³꞉

Ravana defeats Ayodhya king Anaranya

அத² ஜித்வா மருத்தம் ஸ ப்ரயயௌ ராக்ஷஸாதி⁴ப꞉ .
நக³ராணி நரேந்த்³ராணாம் யுத்³த⁴காங்க்ஷீ த³ஷா²னன꞉ .. 7.19.1 ..

ஸமாஸாத்³ய து ராஜேந்த்³ரான்மஹேந்த்³ரவருணோபமான் .
அப்³ரவீத்³ராக்ஷஸேந்த்³ரஸ்து யுத்³த⁴ம் மே தீ³யதாமிதி .. 7.19.2 ..

நிர்ஜிதா꞉ ஸ்மேதி வா ப்³ரூத ஏஷ மே ஹி ஸுநிஷ்²சய꞉ .
அன்யதா² குர்வதாமேவம் மோக்ஷோ நைவோபபத்³யதே .. 7.19.3 ..

ததஸ்த்வபீ⁴ரவ꞉ ப்ராஜ்ஞா꞉ பார்தி²வா த⁴ர்மநிஷ்²சயா꞉ .
மந்த்ரயித்வா ததோ (அ)ன்யோன்யம் ராஜான꞉ ஸுமஹாப³லா꞉ .
நிர்ஜிதா꞉ ஸ்மேத்யபா⁴ஷந்த ஜ்ஞாத்வா வரப³லம் ரிபோ꞉ .. 7.19.4 ..

து³ஷ்யந்த꞉ ஸுரதோ² கா³தி⁴ர்க³யோ ராஜா புரூரவா꞉ .
ஏதே ஸர்வே (அ)ப்³ருவம்ஸ்தாத நிர்ஜிதா꞉ ஸ்மேதி பார்தி²வா꞉ .. 7.19.5 ..

Monday, 18 May 2026

மருத்தன் | சர்க்கம் – 018 (36)

Maruttha | Sarga-018 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுடனான போரில் இருந்து விலகிய மருத்தன்; தாங்கள் மறைந்து கொள்ள இடமளித்த உயிரினங்களுக்கு வரங்களைக் கொடுத்த தேவர்கள்...

Ravana's war challenge to King Marutta, who was doing Maheshwara Yajna

வேதவதி ஹுதாசனத்திற்குள் {நெருப்புக்குள்} பிரவேசித்த பிறகு, அந்த ராவணன் புஷ்பகத்தில் ஏறி, மேதினியைச் சுற்றி வந்தான்.(1) பிறகு, உசீரபீஜத்தை {உசீர பீஜம் / காந்தாரம் என்ற நாட்டை} அடைந்து, நிருபதியான {மன்னனான} மருத்தன் யஜ்ஞம் செய்வதைக் கண்டான்.(2) சாக்ஷாத் பிருஹஸ்பதியின் பிராதாவும் {நேரடியாகப் பிருஹஸ்பதியுடன் பிறந்தவரும்}, தர்மஜ்ஞரும் {தர்மத்தை அறிந்தவரும்}, சம்வர்த்தர் என்ற பெயருடையவருமான பிரம்மரிஷி, சர்வ தேவ கணங்கள் சூழ, அங்கே யாகம் செய்வித்துக் கொண்டிருந்தார்.(3) அந்த ராக்ஷசன் பெற்ற வரங்களால் வெல்லப்பட முடியாதவனாக இருப்பதை தேவர்கள் கண்டனர். அவனைக் கண்டு பீதியடைந்த அவர்கள் திர்யக்யோனிகளுக்குள் நுழைந்தனர் {அச்சமடைந்த தேவர்கள் விலங்குகள், பறவைகளின் உடல்களுக்குள் மறைந்து கொண்டனர்}.(4) இந்திரன் மயூரமாகவும் {மயிலாகவும்}, தர்மராஜா வாயஸமாகவும் {யமன் காகமாகவும்} மாறினர். தனாதியக்ஷன் {குபேரன்} ஓணானாகவும், வருணன் ஹம்சமாகவும் {அன்னப்பறவையாகவும்} மாறினர்.(5)