The Pushpaka vimana - The ariel car | Sarga-015 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராக்ஷசர்களுக்கும், யக்ஷர்களுக்கும் இடையில் நடந்த யுத்தம்; புஷ்பக விமானத்தைக் கவர்ந்து சென்ற ராவணன்...
பிறகு, ஆயிரக்கணக்கான யக்ஷேந்திரர்கள் அஞ்சி ஓடுவதைக் கண்ட தனாதியக்ஷன் {குபேரன்}, மஹாயக்ஷனான மாணிசரனை {மாணிபத்ரனை} நோக்கி இதை கூறினான்:(1) "இயக்ஷேந்திரா, துர்விருத்தனும் {தீய நடத்தை கொண்டவனும்}, பாவ சித்தம் கொண்டவனுமான ராவணனைக் கொல்வாயாக. யுத்தசாலிகளான யக்ஷ வீரர்களுக்கு நீ அடைக்கலம் கொடுப்பாயாக" {என்றான் குபேரன்}.(2)



