The war between Yakshas and Rakshasas | Sarga-014 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனும், அவனது மந்திரிமாரும், யக்ஷர்கள் மீது தொடுத்த தாக்குதல்...
அவன் {ராவணன்}, நித்யம் பலம் மிக்கவர்களான ஆறு அமைச்சர்களுடன் சென்றான். அவர்கள் மஹோதரன், பிரஹஸ்தன், மாரீசன், சுகன், சாரணன்,(1) நித்யம் சமர்செய்யத் துடிக்கும் வீரனான தூம்ராக்ஷன் ஆகியோராவர். இந்தப் புகழ்மிக்கவர்களால் சூழப்பட்ட அந்த ஸ்ரீமான் {ராவணன்}, உலகங்களை எரித்து விடுபவனைப் போலக் குரோதத்துடன் சென்றான்.(2) அவன் புரங்கள் {நகரங்கள்}, நதிகள், சைலங்கள், வனங்கள், உபவனங்கள் பலவற்றை ஒரு முஹூர்த்தத்தில் கடந்து சென்று, கைலாச கிரியை அடைந்தான்.(3)



