Friday, 5 June 2026

வருணன் | சர்க்கம் – 023 (54)

Varuna | Sarga-023 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுக்கு நிவாதகவசர்களுடன் ஏற்பட்ட நட்பு; காலகேயர்களை வென்று, வித்யுத்ஜிஹ்வனை கொன்றது; இராவணன், தெய்வீகப் பசுவான சுரபியை வணங்கியது; வருணனின் புத்திரர்களை வென்றது...

Ravana bowing to the Divine cow Surabhi also known as Kamadhenu

இரணஸ்லாகியான தசக்ரீவன் {போரைப் புகழ்பவனும், பத்துக் கழுத்துகளைக் கொண்டவனுமான ராவணன்}, திரிதசபுங்கவனான {முப்பத்து முக்கோடி தேவர்களில் சிறந்தவனான} யமனை வெற்றி கொண்ட பிறகு, தன் சகாயர்களை {உதவியாளர்களை/அமைச்சர்களைப்} பார்த்தான்.(1) பிறகு, {யமனின்} தாக்குதலில் காயமடைந்து, உதிரம் தோய்ந்த உடலைக் கொண்ட ராவணனைக் கண்ட ராக்ஷசர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் அவனை அணுகினர்.(2) மாரீசன் முதலிய பிரமுகர்கள் ஜயத்தை {ராவணனின் வெற்றியைப்} போற்றி வாழ்த்திய பின்னர், ராவணனால் ஆறுதல் கூறப்பட்டவர்களாக புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} ஏறினர்.(3) 

உத்தர ராமாயணம் 023ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ த்ரயோவிம்ஷ²꞉ ஸர்க³꞉

Ravana bowing to the Divine cow Surabhi also known as Kamadhenu

ததோ ஜித்வா த³ஷ²க்³ரீவோ யமம் த்ரித³ஷ²புங்க³வம் .
ராவணஸ்து ரணஷ்²லாகீ⁴ ஸ்வஸஹாயாந்த³த³ர்ஷ² ஹ .. 7.23.1 .. 

ததோ ருதி⁴ரஸிக்தாங்க³ம் ப்ரஹாரைர்ஜர்ஜரீக்ருதம் .
ராவணம் ராக்ஷஸா த்³ருஷ்ட்வா ஹ்யஷ்டவத் ஸமுபாக³மன் .. 7.23.2 ..

ஜயேன வர்த⁴யித்வா ச மாரீசப்ரமுகா²ஸ்தத꞉ .
புஷ்பகம் பே⁴ஜிரே ஸர்வே ஸாந்த்விதா ராவணேன து .. 7.23.3 ..

Monday, 1 June 2026

இயமன் | சர்க்கம் – 022 (51)

Yama | Sarga-022 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இயமனுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த கடும்போர்; யமனை வேண்டிய பிரம்மன்; யமன் மறைந்தது...

Brahma stops Yama from using his Kaladhanda against Ravana

அந்த வைவஸ்வதப் பிரபு {சூரியனின் மகனும், தலைவனுமான யமன்}, அவனுடைய மஹாநாதத்தை {ராவணனின் பெரும் முழக்கத்தைக்} கேட்டுவிட்டு, தன் சத்ரு விஜயமடைந்தான் என்றும், தன் சொந்த பலம் {படை} அழிவடைகிறது என்றும் கருதினான்.(1) மேலும் அவன் {யமன்}, தன் படைவீரர்கள் கொல்லப்பட்டதை அறிந்து, குரோதத்தில் சிவந்த கண்களுடன், தன் சூதனிடம் {தேரோட்டியிடம்}, "இந்தத் தேரைத் துரிதமாகக் கொண்டு வருவாயாக" என்று கூறினான்.(2) 

உத்தர ராமாயணம் 022ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ த்³வாவிம்ஷ²꞉ ஸர்க³꞉

Brahma stops Yama from using his Kaladhanda against Ravana

ஸ தஸ்ய து மஹாநாத³ம் ஷ்²ருத்வா வைவஸ்வத꞉ ப்ரபு⁴꞉ .
ஷ²த்ரும் விஜயினம் மேனே ஸ்வப³லஸ்ய ச ஸங்க்ஷயம் .. 7.22.1 ..

ஸ ஹி யோதா⁴ன்ஹதான்மத்வா க்ரோத⁴ஸம்ரக்தலோசன꞉ .
அப்³ரவீத்த்வரிதம் ஸூதம் ரதோ² (அ)யமுபனீயதாம் .. 7.22.2 ..

Wednesday, 27 May 2026

பாசுபதாஸ்திரம் | சர்க்கம் – 021 (46)

Pasupata Astra | Sarga-021 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: யமனிடம் விரைந்து சென்று ராவணனின் வரவை அறிவித்த நாரதர்; நரகத்தின் பாபிகளை விடுவித்த ராவணன்; யமகிங்கரர்களுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த யுத்தம்...

Ravana Yama war in a Yamaloka

இவ்வாறு நன்கு சிந்தித்த அந்த விப்ரேந்திரர் {பிராமணர்களில் சிறந்தவரான அந்த நாரதர்}, நடந்ததை அப்படியே கூறுவதற்காக, லகு விக்ரமத்துடன் {வேகமான நடையுடன்} யமனின் சதனத்தை {இருப்பிடத்தை} நோக்கிச் சென்றார்.(1) அங்கே அவர் {நாரதர்}, அக்னியை முன்னிறுத்திக் கொண்டு, பிராணிகளில் {உயிரினங்களில்} எவருக்கு எத்தகைய விதானத்தை வழங்க வேண்டுமோ {எவருக்கு எத்தகையதைச் செய்ய வேண்டுமோ}, அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் யம தேவனை தம் முன்னே கண்டார்.(2) 

உத்தர ராமாயணம் 021ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ ஏகவிம்ஷ²꞉ ஸர்க³꞉

Ravana Yama war in a Yamaloka

ஏவம் ஸஞ்சிந்த்ய விப்ரேந்தோ³ ஜகா³ம லகு⁴விக்ரம꞉ .
ஆக்²யாதும் தத்³யதா²வ்ருத்தம் யமஸ்ய ஸத³னம் ப்ரதி .. 7.21.1 ..

அபஷ்²யத்ஸ யமம் தத்ர தே³வமக்³னிபுரஸ்க்ருதம் .
விதா⁴னமுபதிஷ்ட²ந்தம் ப்ராணினோ யஸ்ய யாத்³ருஷ²ம் .. 7.21.2 ..

Monday, 25 May 2026

நாரதர் | சர்க்கம் – 020 (33)

Naradha | Sarga-020 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நாரதரைக் கண்ட ராவணன்; அவரால் தூண்டப்பெற்றது; யமனை எதிர்த்து யமலோகம் சென்ற ராவணன்...

Conversation betwee Ravana and Naradha

இராக்ஷசாதிபன் பிருத்வியில் இருந்த மர்த்தியர்களை {பூமியில் இருந்த மனிதர்களை} அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது, மேகக் கூட்டத்திற்கிடையில் இருந்த முனிபுங்கவரான நாரதரை அணுகினான்.(1)  நிசாசரன் தசக்ரீவன், அவரை வணங்கி, குசலம் விசாரித்து, அவர் வந்ததற்கான காரணத்தையும் கேட்டான்.(2)

Labels

அகஸ்தியர் அனரண்யன் இந்திரன் இராமன் இராவணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கேதுமதி கைகசி சங்கன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுந்தரி சுமாலி சூரியபானு சூர்ப்பணகை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தேவவர்ணினி நந்தி நாரதர் பத்மன் பரத்வாஜர் பிரம்மன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹேதி