Wednesday, 17 December 2025

இராவணன் பிறப்பு | சர்க்கம் – 009 (48)

The birth of Ravana | Sarga-009 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுமாலியின் மகளான கைகசிக்கு தசக்ரீவன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை ஆகியோர் பிறந்தது; கோகர்ணத்தில் அவர்கள் தபம் செய்தது...

Vishravas and Kaikesi

சிறிது காலத்திற்குப் பிறகு சுமாலி என்ற நாமத்தைக் கொண்ட {பெயருடைய} ராக்ஷசன், ரசாதலத்திலிருந்து வந்து சர்வ மர்த்யலோகத்திலும் {மனிதர்களின் உலகம் முழுவதும்} அலைந்து திரிந்தான்.(1) அவன் நீல மேகத்தைப் போலத் தோற்றமளித்தான், தப்த காஞ்சனத்தாலான {புடம்போட்ட பொன்னாலான} குண்டலங்களை அணிந்திருந்தான். பத்மம் இல்லாத ஸ்ரீயை {தாமரை இல்லாத லக்ஷ்மியைப்} போன்ற தன் கன்னிகையை {மகளை} உடன் அழைத்து வந்தான்.(2) 

உத்தர ராமாயணம் 009ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ நவம꞉ ஸர்க³꞉

Vishravas and Kaikesi

கஸ்யசித்த்வத² காலஸ்ய ஸுமாலீ நாம ராக்ஷஸ꞉ .
ரஸாதலான்மர்த்யலோகம் ஸர்வம் வை விசசார ஹ .. 7.9.1 ..

நீலஜீமூதஸங்காஷ²ஸ்தப்தகாஞ்சனகுண்ட³ல꞉ .
கன்யாம் து³ஹிதரம் க்³ருஹ்ய வினா பத்³மமிவ ஷ்²ரியம் .. 7.9.2 ..

Tuesday, 16 December 2025

பாதாள லோகம் | சர்க்கம் – 008 (29)

The nether world | Sarga-008 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மால்யவான் செய்த போரும், அவனது தோல்வியும்; சுமாலியும், ராக்ஷசர்கள் பிறரும் பாதாள லோகத்திற்குள் பின்வாங்கிச் சென்றது...

Rakshasas enter Patala and Kubera enters Lanka in his pushupaka vimana

பலம் {படை} வதைக்கப்படும்போது, பத்மநாபன் அவர்களைப் பின்தொடர்ந்தான். வேலத்தை அடைந்த ஆர்ணவத்தை {கரையை அடைந்த கடலைப்} போல மால்யவான் திரும்பிவந்தான்.(1) நிசாசரனின் மௌலி {கிரீடம்} கோபத்தில் அசைந்தது; அவனது நயனங்கள் {கண்கள்} சிவந்தன. அவன் புருஷோத்தமனான பத்மநாபனிடம் இந்த வசனத்தைக் கூறினான்:(2) "நாராயணா, புராதன க்ஷாத்ரதர்மத்தை {தொன்மையான க்ஷத்திரிய அறத்தை} நீ அறிந்தாயில்லை. யுத்தம் செய்ய மனமில்லாமல் பீதியுடன் ஓடும் எங்களை நீ கொல்கிறாய்.(3) ஓர் அசுரனைத் தவிர வேறு எவனும், பராங்முக வதம் என்ற {பாரா முகத்தினராய் ஓடிச் செல்பவர்களைக் கொல்லும்} பாபத்தைச் செய்தால், அந்தக் கொலையாளி, புண்ணிய கர்மங்களைச் செய்வோர் அடையும் ஸ்வர்க்கத்திற்குச் செல்லமாட்டான்.(4) சங்கு சக்கர கதாதரா, உனக்கு யுத்தத்தில் சிரத்தையுண்டானால், இதோ நான் நிற்கிறேன். உன் பலத்தை என்னிடம் காட்டுவாயாக" {என்றான் மாலியவான்}.(5)

உத்தர ராமாயணம் 008ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ (அ)ஷ்டம꞉ ஸர்க³꞉

Rakshasas enter Patala and Kubera enters Lanka in his pushupaka vimana

ஹன்யமானே ப³லே தஸ்மின்பத்³மநாபே⁴ன ப்ருஷ்ட²த꞉ .
மால்வான்ஸந்நிவ்ருத்தோ (அ)த² வேலாமேத்ய இவார்ணவ꞉ .. 7.8.1 ..

ஸம்ரக்தநயன꞉ கோபாச்சலன்மௌளிர்நிஷா²சர꞉ .
பத்³மநாப⁴மித³ம் ப்ராஹ வசனம் புருஷோத்தமம் .. 7.8.2 ..

நாராயண ந ஜானீஷே க்ஷாத்ரத⁴ர்மம் புராதனம் .
அயுத்³த⁴மனஸோ பீ⁴தானஸ்மான்ஹம்ஸி யதே²தர꞉ .. 7.8.3 ..

பராங்முக²வத⁴ம் பாபம் ய꞉ கரோத்யஸுரேதர꞉ .
ஸ ஹந்தா ந க³த꞉ ஸ்வர்க³ம் லப⁴தே புண்யகர்மணாம் .. 7.8.4 ..

யுத்³த⁴ஷ்²ரத்³தா⁴ (அ)த²வா தே (அ)ஸ்தி ஷ²ங்க²சக்ரக³தா³த⁴ர . 
அஹம் ஸ்தி²தோ (அ)ஸ்மி பஷ்²யாமி ப³லம் த³ர்ஷ²ய யத்தவ .. 7.8.5 ..

Saturday, 13 December 2025

மாலி வதம் | சர்க்கம் – 007 (55)

Mali killed | Sarga-007 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராக்ஷசர்களுக்கும் நாராயணனுக்கும் இடையில் நடந்த யுத்தம்; மாலி கொல்லப்பட்டது...

Rakshasa Mali attacking Garuda with his mace

நாராயண கிரியில் ராக்ஷச மேகங்கள் கர்ஜித்தன. மேகங்கள் அத்ரியில் வர்ஷிப்பதை {மலையில் மழை பொழிவதைப்} போல {அந்த ராக்ஷசக்கூட்டம் விஷ்ணுவின் மீது} சரங்களை வர்ஷித்தன {கணைகளைப் பொழிந்தன}.(1) சியாம {கரிய} நிறத்தவனான அந்த விஷ்ணு, கரிய நிறத்தவரான ராக்ஷசோத்தமர்களால் சூழப்பட்டு, மழைமேகங்களால் சூழப்பட்ட அஞ்சன கிரியை {மைக்குவியலைப்} போல விளங்கினான்.(2)

உத்தர ராமாயணம் 007ம் ஸர்கம்

ஶ்ரீமத்³ராமாயணே வால்மீகீயே ஆதி³காவ்யே ஶ்ரீமது³த்தரகாண்டே³ ஸப்தம꞉ ஸர்க³꞉

Rakshasa Mali attacking Garuda with his mace

நாராயணகி³ரிம் தே து க³ர்ஜந்தோ ராக்ஷஸாம்பு³தா³꞉ .
வவர்ஷு꞉ ஷ²ரவர்ஷேண வர்ஷேணேவாத்³ரிமம்பு³தா³꞉ .. 7.7.1 ..

ஷ்²யாமாவதா³தஸ்தைர் விஷ்ணுர்நீலைர்னக்தஞ்சரோத்தமை꞉ .
வ்ருதோ (அ)ஞ்ஜனகி³ரீவாஸீத் வர்ஷமாணை꞉ பயோத⁴ரை꞉ .. 7.7.2 ..

Saturday, 29 November 2025

நாராயணன் | சர்க்கம் – 006 (69)

Narayana | Sarga-006 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தேவர்களுக்கு ஆலோசனை வழங்கிய சிவன்; விஷ்ணுவின் உதவியை நாடிய தேவர்கள்; தேவலோகத்தை அபகரித்த ராக்ஷசர்கள்; தேவர்களுக்கு உதவ வந்த நாராயணன்...

Vishnu on Garuda with all his weapons

அவர்கள் {ராக்ஷசர்கள்}, தேவர்களையும், தபோதனர்களான ரிஷிகளையும் துன்புறுத்தினர். பயமடைந்த அவர்கள், தேவதேவனான மஹேஷ்வரனிடம் {சிவனிடம்} சரணம் அடைந்தனர் {தஞ்சம் புகுந்தனர்}.(1)