Varuna | Sarga-023 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனுக்கு நிவாதகவசர்களுடன் ஏற்பட்ட நட்பு; காலகேயர்களை வென்று, வித்யுத்ஜிஹ்வனை கொன்றது; இராவணன், தெய்வீகப் பசுவான சுரபியை வணங்கியது; வருணனின் புத்திரர்களை வென்றது...
இரணஸ்லாகியான தசக்ரீவன் {போரைப் புகழ்பவனும், பத்துக் கழுத்துகளைக் கொண்டவனுமான ராவணன்}, திரிதசபுங்கவனான {முப்பத்து முக்கோடி தேவர்களில் சிறந்தவனான} யமனை வெற்றி கொண்ட பிறகு, தன் சகாயர்களை {உதவியாளர்களை/அமைச்சர்களைப்} பார்த்தான்.(1) பிறகு, {யமனின்} தாக்குதலில் காயமடைந்து, உதிரம் தோய்ந்த உடலைக் கொண்ட ராவணனைக் கண்ட ராக்ஷசர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் அவனை அணுகினர்.(2) மாரீசன் முதலிய பிரமுகர்கள் ஜயத்தை {ராவணனின் வெற்றியைப்} போற்றி வாழ்த்திய பின்னர், ராவணனால் ஆறுதல் கூறப்பட்டவர்களாக புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} ஏறினர்.(3)






